ரன் மழை பொழிவாரா விராட் கோலி? - இன்று 2ஆவது டி20 போட்டி

ரன் மழை பொழிவாரா விராட் கோலி? - இன்று 2ஆவது டி20 போட்டி

ரன் மழை பொழிவாரா விராட் கோலி? - இன்று 2ஆவது டி20 போட்டி

கடந்த ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் அணிக்குத் திரும்புகின்றனர்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. நேற்று முன்தினம் நடந்த முதலாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா தலைமையில் டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 13ஆவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அவர் டி20 போட்டியில் தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை தனதாக்கினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இதில் இந்திய அணி பல மாற்றங்களுடன் களம் காண உள்ளது.  முதலாவது ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த ஆட்டத்தில் இருந்து அணிக்கு திரும்புகிறார்கள். ஃபார்ம் இன்றி தவித்துவரும் விராட் கோலி சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், வாய்ப்பை தக்கவைக்க இங்கிலாந்தும் மல்லுக்கட்டும் நிலையில், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இதையும் படிக்கலாமே: அரைசதம் + 4 விக்கெட்; ஹர்திக்கிடம் வீழ்ந்த இங்கிலாந்து!


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com