டாஸ் வென்றது இங்கிலாந்து : இந்தியா முதல் பவுலிங்

டாஸ் வென்றது இங்கிலாந்து : இந்தியா முதல் பவுலிங்
டாஸ் வென்றது இங்கிலாந்து : இந்தியா முதல் பவுலிங்

இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 38வது லீக் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெறுகிறது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது. அத்துடன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பந்துவீசவுள்ளது. இந்திய அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் தொடக்க பேட்ஸ்மேன் ஜாசன் ராய் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். 

அந்த அணியில் தொடக்க வீரராக விளையாடி வந்த வின்ஸ் இடம்பெறவில்லை. அத்துடன் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிளங்கட் இடம்பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்றால் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு பறிபோகலாம். அதேசமயம் இந்திய அணி வென்றால் அரையிறுதிக்குள் நுழையும். எனவே இரண்டு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com