நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 166 ரன்களை எடுத்துள்ளது.
அந்த அணிக்காக மொயின் அலி (51), டேவிட் மலான் (41) மற்றும் ஜாஸ் பட்லர் (29) ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி இருந்தனர். லிவிங்ஸ்டன் 10 பந்துகளில் 17 ரன்களை பதிவு செய்தார். இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பிரதான தொடக்க வீரர் ஜேசன் ராய் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
சவுதி, மில்னே, நீஷம் மற்றும் சோதி தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். பவர் பிளே ஓவர்களில் இங்கிலாந்து அணியை 40 ரன்கள் மட்டுமே எடுக்க அனுமதித்து இருந்தது நியூசிலாந்து அணி. இருந்தும் கடைசி பத்து ஓவர்களில் இங்கிலாந்து 99 ரன்களை குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூசிலாந்து அணி சேஸ் செய்து வருகிறது. அந்த அணி 13 ரன்கள் சேர்ப்பதற்குள் குப்தில் மற்றும் வில்லியம்சன் விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இரண்டுவிக்கெட்டுகளையும் வோக்ஸ் சாய்த்தார்.