இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்-முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியை அறிவித்தது இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்-முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியை அறிவித்தது இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்-முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியை அறிவித்தது இங்கிலாந்து

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 வீரர்கள் அடங்கிய அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த தொடரில் முதல் போட்டி டிரெண்ட் பிரிட்ஜில் ஆரம்பமாக உள்ளது. 

இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 வீரர்கள் இடம்பெற்றுள்ள அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பேர்ன்ஸ், பட்லர், ஜாக் கிரவுலி, சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஓலி போப், ஓலி ராபின்சன், டாம் சிப்லே, பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்தியா தற்போது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தில் விளையாடி வருகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com