சென்னை டெஸ்ட்: ஜோ ரூட், ஸ்டோக்ஸ் அதிரடி! திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

சென்னை டெஸ்ட்: ஜோ ரூட், ஸ்டோக்ஸ் அதிரடி! திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்!
சென்னை டெஸ்ட்: ஜோ ரூட், ஸ்டோக்ஸ் அதிரடி! திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து நேற்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்து. இதில் தொடக்க வீரர் டோம் சிப்லே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் நேற்றைய தினமே சதமடித்துவிட்டார். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரின் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் ஸ்டோக்ஸ் 74 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். கேப்டன் ஜோ ரூட்டும் தன் பங்குக்கு 150 ரன்கள் மேல் கடந்தார். இதனையடுத்து இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 156 ரன்களும் ஸ்டோக்ஸ் 63 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com