‘கேட்ச் பிடிக்காம அம்பயர் கிட்ட என்ன பேச்சு’ - பென் ஸ்டோக்ஸை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

‘கேட்ச் பிடிக்காம அம்பயர் கிட்ட என்ன பேச்சு’ - பென் ஸ்டோக்ஸை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
‘கேட்ச் பிடிக்காம அம்பயர் கிட்ட என்ன பேச்சு’ - பென் ஸ்டோக்ஸை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 48.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களை குவித்தது. தொடர்ந்திய இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. 

ரோகித் ஷர்மாவும், கில்லும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். பிராட் வீசிய இன்னிங்க்ஸின் இரண்டாவது ஓவரின் 4வது பந்தை கில் எதிர்கொண்டார். அந்த பந்து எட்ஜாகி இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த பென் ஸ்டோக்ஸின் கைகளில் தஞ்சமடைந்தது. இருப்பினும் டிவி அம்பயர் ரீபிளேவில் பார்த்த போது பந்து கீழே பட்டது போல இருந்தது. அதையடுத்து கில் நாட் அவுட் என சொல்லப்பட்டது. 

அதை தொடர்ந்து ஸ்டோக்ஸ் அந்த முடிவை கேலி செய்யும் வகையில் நக்கலாக சிரித்தார். இங்கிலாந்து கேப்டன் ரூட்டும், பிராடும் அம்பயரிடம் முறையிட்டனர். அதை கவனித்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இங்கிலாந்து அணியையும், ஸ்டோக்ஸையும் விமர்சித்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்தது.

‘கேட்ச் பிடிக்காம அம்பயர் கிட்ட என்ன பேச்சு’, ‘பாருடா’, ‘இங்கிலாந்து வீரர்கள் எதற்காக வாக்குவாதம் செய்கிறார்கள்’, ‘தம்பி கேட்சே பிடிக்கலையாம். இதுல நீ அவுட் கேக்குற’ என்கிற தொனியில் அந்த விமர்சனங்கள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com