கவானி 'களவாடிய' 2 கோல்கள் ! போட்டியில் இருந்து ரொனால்டோ அவுட்

கவானி 'களவாடிய' 2 கோல்கள் ! போட்டியில் இருந்து ரொனால்டோ அவுட்
கவானி 'களவாடிய' 2 கோல்கள் ! போட்டியில் இருந்து ரொனால்டோ அவுட்

உலகக்கோப்பை ஆட்டத்தில் நாக் அவுட் சுற்றில் உருகுவே மற்றும் போச்சுகல் அணிகள் நேற்று இரவு மோதின. மிகவும் பரபரப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டியில் உருகுவே அணி கிறிஸ்டியோனோ ரொனால்டோ தலைமயிலான போச்சுகல் அணியை 2-1  என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


இதனையடுத்து உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது.நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. இதனையடுத்து உருகுவே - போர்ச்சுகல் அணியின் ஆட்டம் தொடங்கியது ஏற்கெனவே மெஸ்ஸியின் ஆட்டத்தை காண முடியாததால், ரொனால்டோ ஆட்டத்தையாவது இனி பார்க்க வேண்டுமென்று கால்பந்து ரசிகர்கள் வேண்டிக்கொண்டிருந்தனர்.

ஆனால் ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே கவானி முதல் கோலடிக்க 1-0 என உருகுவே முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் போர்ச்சுகலின் பீபே கோலடிக்க 1-1 என போர்ச்சுகல் சமநிலையை உருவாக்கியது. 62வது நிமிடத்தில் கவானி மீண்டும் கோலடிக்க 2-1 என உருகுவே முன்னிலை பெற்றது. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வென்று காலிறுதிக்கு முன்னேறியது உருகுவே. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com