இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
Published on

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சிந்து லீக் சுற்றுப்போட்டிகளில் 3ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்தார். 3-வது போட்டியில் ஜப்பானின்  யமாகுச்சி-யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனை சென் யுபெய் உடன் பிவி சிந்து மோதினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-15, 21-18 என்ற நேர் செட்களில் பிவி சிந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com