இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சிந்து லீக் சுற்றுப்போட்டிகளில் 3ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்தார். 3-வது போட்டியில் ஜப்பானின்  யமாகுச்சி-யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனை சென் யுபெய் உடன் பிவி சிந்து மோதினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-15, 21-18 என்ற நேர் செட்களில் பிவி சிந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com