காயம் ஆறவில்லை: டு பிளிசிஸ்-க்கு மீண்டும் ரெஸ்ட்?

காயம் ஆறவில்லை: டு பிளிசிஸ்-க்கு மீண்டும் ரெஸ்ட்?

காயம் ஆறவில்லை: டு பிளிசிஸ்-க்கு மீண்டும் ரெஸ்ட்?
Published on

காயம் சரியாகாத காரணத்தால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன்  டு பிளிசிஸுக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

பங்களாதேஷ் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. அப்போது நடந்த போட்டியின் போது டு பிளிசிஸ் காயம் அடைந்தார். இந்தச் சம்பவம் அக்டோபர் மாதம் நடந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவரை மூன்று வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். இதனால் அவர் வேறு எந்தப் போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் அவர் தோள்பட்டை அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். 

இதன் காரணமாக ஜிம்பாப்வே அணியுடன் நாளை தொடங்கும் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது. அடுத்து அதிகமான தொடர்களில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி விளையாட இருக்கிறது. இந்தியாவுடன் நீண்ட தொடரில் விளையாட இருக்கிறோம். அடுத்து ஆஸ்திரேலிய தொடர் இருக்கிறது. இதனால் டூப்பிளிசிஸிக்கு ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு அளித்துள்ளோம்’ என்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com