2011 உலகக்கோப்பை பைனலை நினைவுப்படுத்தும் ரோட் சேஃப்டி டி20 தொடரின் இறுதிப் போட்டி!

2011 உலகக்கோப்பை பைனலை நினைவுப்படுத்தும் ரோட் சேஃப்டி டி20 தொடரின் இறுதிப் போட்டி!
2011 உலகக்கோப்பை பைனலை நினைவுப்படுத்தும் ரோட் சேஃப்டி டி20 தொடரின் இறுதிப் போட்டி!

ரோட் சேஃப்டி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் மோத உள்ளனர். இந்த இறுதிப் போட்டி கடந்த 2011-இல் இந்தியாவின் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக்க கோப்பை தொடரின் இறுதி போட்டியை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அப்போது நடைபெற்ற பைனலில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இரண்டு அணிகளிலும் இருப்பது அதற்கு காரணம். 

2011 இல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் விளையாடிய சச்சின், சேவாக், யுவராஜ் சிங், யூசுப் பதான் மற்றும் முனாப் பட்டேல்  ஆகிய 5 வீரர்களும், ரன்னர்-அப் அணியான இலங்கை அணியில் விளையாடிய தில்ஷன், ரங்கன்னா ஹெராத், நுவான் குலசேகரா, அஜந்தா மெண்டீஸ், சமரா சில்வா மற்றும் உபுல் தரங்கா என 6 வீரர்களும் தற்போது இந்த ரோட் சேஃப்டி டி20 தொடரில் விளையாடுகின்றனர். 

சச்சின் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி மீண்டும் இலங்கையை கடந்த 2011 இறுதி ஆட்டத்தில் வென்றதை போலவே வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com