இரட்டைக் குழந்தைக்குக் கிடைத்த வரம்! - தினேஷ் கார்த்திக், தீபிகா நெகிழ்ச்சி

இரட்டைக் குழந்தைக்குக் கிடைத்த வரம்! - தினேஷ் கார்த்திக், தீபிகா நெகிழ்ச்சி
இரட்டைக் குழந்தைக்குக் கிடைத்த வரம்! - தினேஷ் கார்த்திக், தீபிகா நெகிழ்ச்சி

தாய்ப்பால் வங்கி மூலம் கிடைத்து வரும் தாய்ப்பால், தங்களது இரட்டை குழந்தைகளுக்கு எவ்வாறு வரப்பிரசாதமாக அமைந்தது என்று நட்சத்திர ஜோடிகளான தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் தம்பதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக குழந்தைகள் பிறந்தவுடன், அந்தக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கொடுக்கப்படும் தாய்ப்பால், தாயுக்கும், சேயுக்கும் ஒரு உறவு பாலமாக அமையும் என்றே கூறலாம். ஆனால், தாயின் உடல்நிலையில் கோளாறு, குழந்தை பிறக்கும் போது தாய்க்கு ஏற்படும் மன உளைச்சல், தாய் இறந்து போவது உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போய்விடுகிறது.

இதனால், அந்தக் குழந்தைகள் இயற்கையாக தாய்ப்பால் மூலம் பெற வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி முறையாக கிடைக்காமல் ஆகிவிடுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு, வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுதான் தாய்ப்பால் வங்கி. இந்த வங்கிகளில், தங்களது குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் போக, மீதமுள்ள தாய்ப்பாலை தானமாக கொடுக்கலாம். அவ்வாறு இந்த வங்கிகளுக்கு தானமாக கொடுக்கப்படும் தாய்ப்பால், முறையாக சுத்திகரித்து, பின்னர் பதப்படுத்தி வைத்து, தேவைப்படும்போது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படும்.

அந்தவகையில், விளையாட்டுத்துறை நட்சத்திர தம்பதிகளான தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் எவ்வாறு தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் பெற்று, தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக், அர்ஜூனா விருது பெற்ற ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிக்கலை, கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, இந்தத் தம்பதிக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இதனை தங்களது சமூக வலைத்தளம் மூலம், இந்த தம்பதி மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.

இந்நிலையில், சில உடல்நிலை பிரச்சனைகள் காரணமாக, தனது குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுப்பதில் தீபிகா பல்லிக்கலுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீபிகாவின் இரட்டை குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில், அவருடைய மருத்துவர், நியோலாக்டோ லைஃப் சயின்சஸ் தாய்ப்பால் வங்கியை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளார். இதுபற்றி தீபிகா பல்லிக்கல் கூறுகையில், "நான் பல முயற்சிகள் எடுத்தப்போதிலும், எனது இரட்டைக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது எனக்கு ஒரு சவாலாக இருந்தது. அப்போதுதான் நியோலாக்டா லைஃப் சயின்சஸ் தாய்ப்பால் குறித்து எனது மருத்துவர் கூறினார். இதற்கு நான் அவருக்கு நன்றி சொல்லிய ஆகவேண்டும்.

ஏனெனில் எங்களது குழந்தைகளுக்கு சரியான நேரத்தில், சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதில் நானும், தினேஷும் உறுதியாக இருந்தோம். அதனால், எனது குழந்தைகளுக்கு 100 சதவீதம் தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தோம். இதனால், மருத்துவரின் பரிந்துரைப்படி நியோ லாக்டோ லைஃப் சயின்சஸ் தாய்ப்பாலை (NeoLacta PHBM) எனது குழந்தைகளுக்கு பயன்படுத்துகிறேன்.

மேலும், தாய்ப்பால் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துடன் ஒப்பிடும்போது, செயற்கை உணவு மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து நிச்சயம் குறைந்த பலனையே தரும் என்பதை அறிந்திருந்ததால், எனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதிர்ஷ்டவமாக, எனது கணவர் தினேஷ் கார்த்திக்குக்கும், எனக்கும் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து இருந்தது. 

சரியான ஊட்டச்சத்து இருந்தால் மட்டுமே, உடல்நிலை மற்றும் நமது வாழ்வு சரியாக இருக்கும் என்பதை அறிந்திருப்பதால், எங்களது இரட்டை குழந்தைகளுக்கு நியோ லாக்டா பேஸ்டுரைஸ்டு தாய்ப்பாலை (PHBM) பயன்படுத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதுமட்டுமின்றி நியோ லாக்டோவின் தயாரிப்புகள் தங்களது குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்தைப் பெற வழிவகுத்துள்ளது. இந்த தாய்ப்பால் வங்கிகள் மூலம், அதிகளவிலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 100 சதவிகிதம் தாய்ப்பால் உணவை உறுதி செய்வார்கள் என்று நம்புகிறேன்” இவ்வாறு தீபிகா பல்லிக்கல் கூறியுள்ளார்.

இதுகுறித்து நியோ லாக்டோ லைஃப் சயின்சஸ் தலைமை அதிகாரியும், மருத்துவருமான விக்ரம் ரெட்டி கூறுகையில், “போதிய தாய்ப்பால் இல்லாதது, தாய்ப்பாலே சுரக்காமல் இருப்பது, உடல்நிலை கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை கொண்ட தாய்மார்களுக்கு உதவும் வகையிலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், தாய்ப்பாலைப் பயன்படுத்தி நியோ லாக்டோ தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். 

புனே ஹரடியில் உள்ள தாய்சேய் நல மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் துஷார் பரிக் இதுகுறித்து கூறுகையில், இந்தியாவில் குறைந்த அளவிலான தாய்ப்பால் வங்கிகளே உள்ளது என்றும், இதளால் அதிகளவிலான தாய்ப்பால் வங்கிகளை நிறுவ வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், தாய்ப்பால் தானம் அளிக்கும் தாய்மார்கள், சட்டவிரோத மருந்துகளை பயன்படுத்துகிறார்களா, இரத்ததால் பரவும் நோய்கள் ஏதேனும் உள்ளதா, கல்லீரல் பிரச்சனை உள்ளதா, புகையிலை பழக்கம் உள்ளதா, எச்.ஐ.வி. உள்ளிட்ட பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தியப் பின்னரே தாய்ப்பாலை தானம் செய்யமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com