‘ரோகித்-க்கு நெருக்கடி கொடுக்க இதுதான் தோனியின் பிளான்’ ஆகாஷ் சோப்ரா

‘ரோகித்-க்கு நெருக்கடி கொடுக்க இதுதான் தோனியின் பிளான்’ ஆகாஷ் சோப்ரா
‘ரோகித்-க்கு நெருக்கடி கொடுக்க இதுதான் தோனியின் பிளான்’ ஆகாஷ் சோப்ரா

இன்று நடைபெறவுள்ள 2020க்கான ஐபிஎல் தொடரின் முதல்ப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. 

இரு அணிகளுமே தொடரை வெற்றிக்கணக்கோடு தொடக்க ஆர்வம் காட்டி வருகின்றன. 

மும்பை இந்தியன்ஸ் அணியில் டிகாக்கும், ரோகித் ஷர்மாவும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. 

இந்நிலையில் ரோகித் ஷர்மாவுக்கு லெக் ஸ்பின்னர்கள் மூலம் தோனி நெருக்கடி கொடுப்பார் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. 

“தோனி சென்னை அணியின் பவுலிங் இன்னிங்ஸை தீபக் சஹார் மற்றும் இம்ரான் தாஹிர் அல்லது பியூஸ் சாவ்லாவுடன் ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இடது கை பேட்ஸ்மேனாக டிகாக் இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் ரோஹித் ஷர்மாவை கட்டுப்படுத்த லெக் ஸ்பின்னர்களை நிச்சயம் பயன்படுத்துவார்” என தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் பொல்லார்ட் சூப்பர் பார்மில் இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை பாண்டியா சகோதரர்களுக்கு முன்னதாகவே இறக்கலாம். சென்னைக்காக தோனியும், ஜடேஜாவும் முன்னதாகவே பேட்டிங் ஆர்டரில் இறங்கி ஆடவும் வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com