முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை தொடங்குகிறது.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். முதல் நாளில் தகுதிச் சுற்றுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இரண்டாம் நிலை வீராங்கனையான சிந்து, முதல் சுற்றுப் போட்டியில் சீன வீராங்கனையுடன் விளையாடுகிறார். சாய்னா நேவால், ஸ்பெயினின் கரோலினா மரின் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார். ஆடவர் பிரிவில், கிடாம்பி ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம், சமீர் வர்மா, சாய் பிரனீத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.