ஐபிஎல் 2021 :டெல்லி கேப்பிடல்ஸ் ஆல்ரவுண்டர் அக்சார் படேலுக்கு கொரோனா!

ஐபிஎல் 2021 :டெல்லி கேப்பிடல்ஸ் ஆல்ரவுண்டர் அக்சார் படேலுக்கு கொரோனா!
ஐபிஎல் 2021 :டெல்லி கேப்பிடல்ஸ் ஆல்ரவுண்டர் அக்சார் படேலுக்கு கொரோனா!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்சார் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 9 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கடந்த ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்சார் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளுக்காக மும்பையிலுள்ள ஹோட்டலில் தங்கி பயிற்சி பெற்றுவரும் அக்சார் படேலுக்கு 28 ஆம் தேதி செய்யப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வந்தது. அதன்பின்னர் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அக்சார் படேல் தனிமைப்படுத்தப்பட்டு, டெல்லி கேப்பிடல்ஸ் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com