டீ கடையில் இருந்து ஒரு கிரிக்கெட் சுழல்!

டீ கடையில் இருந்து ஒரு கிரிக்கெட் சுழல்!
டீ கடையில் இருந்து ஒரு கிரிக்கெட் சுழல்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர், ஏக்தா பிஸ்ட் 10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கும் ஏக்தாவின் அப்பா, தேநீர் கடை நடத்தியவர் உத்தரகண்டில்.
’நான் ராணுவத்தில் பணியாற்றினேன். ஓய்வு பெற்ற பிறகு வருமானத்துக்காக, அல்மோராவில் தேநீர் கடையை ஆரம்பித்தேன். 6 வயதிலேயே ஏக்தாவுக்கு கிரிக்கெட் ஆர்வம். அவளது ஆர்வத்துக்கு நாங்கள் தடைபோட்டதில்லை. அப்போதிருந்து ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் மீதான அவளது ஆர்வம் அதிகரித்துக்கொண்டே சென்றது. 2011-ல் தேசிய அணியில் இடம் பிடித்தாள். இப்போது சாதித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறாள்’ என்று பூரிக்கிறார் ஏக்தாவின் அப்பா, குந்தன் சிங் பிஸ்ட்.
ஏக்தாவின் அம்மா தாரா கூறும்போது, ‘சிறு வயதில் பையன்களுடன் கிரிக்கெட் ஆடுவாள். அந்த போட்டிகளில் ஏக்தா மட்டுமே பெண்ணாக இருப்பதால் நிறைய பேர் வேடிக்கைப் பார்க்க வருவார்கள். உத்தரகண்ட் மாநில அணியில் விளையாட ஆரம்பித்த பின், எங்கள் வருமானம் அதிகரித்தது. என் கணவருக்கு பென்சனும் அதிகமானதால் தேநீர் கடையை விட்டுவிட்டோம்’ என்கிறார் மகிழ்ச்சி பொங்க.
பிரபலமாவதற்கும் டீ கடைக்கும் ஏதோ லிங்க் இருக்கும் போல தெரியுதே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com