சிறப்பான தொடக்கம் கொடுத்த ராகுல்... சென்னைக்கு 179 ரன்கள் இலக்கு

சிறப்பான தொடக்கம் கொடுத்த ராகுல்... சென்னைக்கு 179 ரன்கள் இலக்கு

சிறப்பான தொடக்கம் கொடுத்த ராகுல்... சென்னைக்கு 179 ரன்கள் இலக்கு
Published on

துபாயில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து சென்னை அணி பந்து வீசியது. 

பஞ்சாப் அணிக்கு ஒப்பனர்கள் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். 

பேட்ஸ்மேன்கள் கே.எல் ராகுல் (63 ரன்கள்), மயங்க் அகர்வால் (26 ரன்கள்), மன்தீப் சிங் (27 ரன்கள்), நிக்கோலஸ் பூரான் (33 ரன்கள்) ஆகியோர் அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணிக்காக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 

இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை குவித்தது பஞ்சாப்.

இதனையடுத்து  179 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம்காண உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com