ஜடேஜா விளாசிய சிக்ஸர்.. மைதானத்திற்கு வெளியே விழுந்த பந்தை ஆர்வமுடன் எடுத்துச்சென்ற நபர்

ஜடேஜா விளாசிய சிக்ஸர்.. மைதானத்திற்கு வெளியே விழுந்த பந்தை ஆர்வமுடன் எடுத்துச்சென்ற நபர்
ஜடேஜா விளாசிய சிக்ஸர்.. மைதானத்திற்கு வெளியே விழுந்த பந்தை ஆர்வமுடன் எடுத்துச்சென்ற நபர்

ஷார்ஜாவில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது.

டுப்லெஸி, வாட்சன் அமைத்துக் கொடுத்த பார்ட்னர்ஷிப்பை பயன்படுத்தி ராயுடுவும், ஜடேஜாவும் டெல்லி பவுலர்களை அப்செட் செய்தனர்.

ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களை அடித்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். 

ஆட்டத்தின் 18வது ஓவரில் தேஷ்பாண்டே வீசிய 5வது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்திருப்பார் ஜடேஜா. அதனால் பந்து மைதானத்திற்கு வெளியே உள்ள சாலைக்கு சென்றது. அங்கு மைதானத்திலிருந்து வரும் பந்தை எடுத்துச் செல்ல காத்திருந்த ஒருவர் அந்த பந்தை எடுத்துச் சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com