மிரட்டுமா சிஸ்கே படை - டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு

மிரட்டுமா சிஸ்கே படை - டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு
மிரட்டுமா சிஸ்கே படை - டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே இன்று 2வது தகுதிச்சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், இன்றையப் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். சென்னை அணியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷர்துல் தாகூர் களமிறங்குகிறார். டெல்லி அணியில் மாற்றமில்லை. ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய அதே அணிதான் விளையாடுகிறது. லீக் போட்டியில் இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியிடம் டெல்லி தோல்வி அடைந்தது.

இந்த ஐபிஎல் தொடரில் தோனி அதிக முறை டாஸ் வென்றுள்ளார். அதில் அதிக முறை பந்துவீச்சையே முதலில் தேர்வு செய்துள்ளார். “பேசாமல் உலகக் கோப்பையில் டாஸ் போட கோலிக்கு பதில் தோனியை அனுப்பலாம்” என்று ஒருவர் விளையாட்டாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com