ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 180 ரன்களை விரட்டி வருகிறது டெல்லி.
பிருத்வி ஷா, ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர் மாதிரியான டெல்லி பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழக்க தவான் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி அரை சதம் கடந்தார்.
இந்த இன்னிங்ஸில் மட்டும் தவானின் பேட்டிலிருந்து வந்த நான்கு கேட்ச்களை சென்னை வீரர்கள் கோட்டை விட்டனர்.
சஹார், வாட்சன், தோனி, ராயுடு என நான்கு பேரும் தவான் கொடுத்த கேட்சை நழுவவிட்டனர்.
அதனை பயன்படுத்தி தவான் டெல்லி அணிக்காக வின்னிங் நாக் ஆடினார்.