தீபக் சஹார் விளையாடுவதில் சிக்கல்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு!

தீபக் சஹார் விளையாடுவதில் சிக்கல்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு!
தீபக் சஹார் விளையாடுவதில் சிக்கல்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் எதிர்வரும் ஐபிஎல் சீசனில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரை அந்த அணி கடந்த மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவர் வரும் சீசனில் குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

பவர்பிளே ஓவர்களில் அவர் அற்புதமாக பந்து வீசி விக்கெட் வீழ்த்துபவர் அவர். அது தவிர பேட்டிங்கிலும் கைகொடுப்பார். அவர் இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை மேற்கொள்ள உள்ளதும் குறிப்பிடதக்கது. 

மார்ச் 26 முதல் மே 29 வரையில் ஐபிஎல் 2022 சீசன் நடைபெற உள்ளது. சென்னை அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் மற்றும் மும்பை அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளும், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் லக்னோ அணிகளுடன் தலா ஒரு போட்டியிலும் முதல் சுற்றில் சென்னை அணி விளையாட உள்ளது. இந்த முறை மொத்தம் 10 அணிகள் பங்கேற்பாதல் இந்த ஏற்பாடு. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com