2020 - 21 சீசனுக்கு சென்னையின் ஃஎப்.சி கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் அறிவிப்பு

2020 - 21 சீசனுக்கு சென்னையின் ஃஎப்.சி கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் அறிவிப்பு
2020 - 21 சீசனுக்கு சென்னையின் ஃஎப்.சி கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் அறிவிப்பு

2020 - 21 சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கொரோனா அச்சுறுத்த்தலினால் கோவாவில் பார்வையாளர்களின்றி நடைபெற உள்ள சூழலில் சென்னையின் ஃஎப்.சி அணிக்கு புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிசாபா லாஸ்லோ.

இதனை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள்ளது. 

56 வயதான லாஸ்லோவின் ஆசியாவில் முதல் முறையாக கிளப் அணிக்கு பயிற்சியாளராக பயிற்சி கொடுக்க உள்ளார். சுமார் இருபது ஆண்டுகளாக சர்வதேச அளவில் கால்ப்பந்தாட்ட கிளப் மற்றும் அணிகளுக்கு பயிற்சி கொடுத்த அனுபவம் பெற்றவர். 

உகாண்டா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளின் தேசிய அணிகள் உட்பட உலகளவில் எட்டு நாடுகளில் உள்ள கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சி கொடுத்தவர் லாஸ்லோ.

2019-20 ஐ.எஸ்.எல் சீசனில் சென்னை அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்ற ஓவன் கோயலுக்கு மாற்றாக லாஸ்லோ புதிய பயிற்சியாளராகி உள்ளார். 

கிளப்பில் வெற்றியைக் கொண்டுவருவதற்கான சான்றுகளை லாஸ்லோ கொண்டுள்ளது என்று சென்னைன் எஃப்சியின் இணை உரிமையாளர் வீடா டானி கூறினார்.

‘லாஸ்லோ கிளப் அணிகளுக்கு சிறப்பாக பயிற்சி கொடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதில் வல்லவர்’ என தெரிவித்துள்ளார் சென்னை அணியின் துணை உரிமையாளர் விட்டா டேனி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com