இன்னும் அரசு அனுமதி வழங்கவில்லையா?.. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்குமா பாகிஸ்தான் அணி?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தொடரில் பாகிஸ்தான் பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டு 13வது ஒருநாள் உலகக்கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதுடன், அதற்குரிய அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை எனவும், அதுபோல் இந்தியா சென்று விளையாட பாகிஸ்தான் அணிக்கு இதுவரை அந்நாட்டு அரசு அனுமதி தரவில்லை எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com