இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர், கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற்றது.
இந்நிலையில், இப்போட்டிகளை மைதானத்திற்கு நேரடியாக வந்து பார்வையிட்டோர் எண்ணிக்கை 12,50,307 என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரை அதிக மக்கள் பார்வையிட்டனர் என்ற பெருமையை 2023 உலகக் கோப்பை தொடர் பெற்றுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை 10 லட்சத்து 16 ஆயிரத்து 420 பேர் நேரில் கண்டு ரசித்திருந்தனர். இங்கிலாந்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை 7 லட்சத்து 52 ஆயிரம் பேர் நேரில் பார்வையிட்டுள்ளனர்.