SA-க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றால்கூட உலகக்கோப்பைக்கு ஈடாகாது! - ரோகித் சர்மா உருக்கம்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றால்கூட அது உலகக்கோப்பை தோல்விக்கு ஈடாகாது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
rohit sharma
rohit sharmaX

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 1-1 என தொடரை சமன்செய்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என வெற்றிபெற்று தென்னாப்பிரிக்கா மண்ணில் புதுவரலாறு எழுதியது.

இந்நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை 26-ஆம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கான அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா முதலிய ஸ்டார் வீரர்கள் திரும்புவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை என்பதால், ரோகித் சர்மா தலைமயிலான இந்திய அணி முதல்முறையாக வெற்றியை ருசிக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது.

உலகக்கோப்பை தோல்விக்கு எதுவும் ஈடாகாது! உருக்கமாக பேசிய ரோகித்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு கூட செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காத ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்கா தொடருக்கு எதிராக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்திய அணியின் கடின உழைப்புக்கு எதாவது பெரிய வெற்றி நிச்சயம் தேவை என்று கூறினார்.

ind vs sa
ind vs sa

தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து பேசிய ரோகித் சர்மா, “தென்னாப்பிரிக்காவில் இதுவரை நாங்கள் டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை. தற்போது இந்த தொடரை வென்றால், அது உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வியை ஈடுசெய்யுமா என்று தெரியவில்லை. எங்களால் இரண்டையும் ஒப்பிட முடியாது, உலகக் கோப்பை என்பது உலகக் கோப்பை மட்டும்தான். ஆனால் இது ஒரு பெரிய தொடர். இந்த தொடரை வென்று நாங்கள் வரலாறு படைத்தால் அது சிறப்பாக இருக்கும்” என்று பேசினார்.

Rohit Sharma
Rohit Sharma

மேலும் இந்திய அணியின் வெற்றிக்கான போராட்டம் குறித்து பேசியுள்ள அவர், "நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம், எனவே எங்களுக்கு ஏதாவது பெரிய வெற்றி தேவை. எல்லோரும் அதற்காகவே ஆசைப்படுகிறார்கள். எங்களிடம் அதற்கான கருவிகள் உள்ளன, நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். எதைப்பற்றியும் அதிகம் சிந்திக்காமல் சுதந்திரமாக விளையாட விரும்புகிறோம்” என்று ரோகித் சர்மா மேலும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com