"Gun Form”-ல இருக்காங்க இந்தியன் டீம்..! உலகக்கோப்பை கன்ஃபார்ம்! - ஸ்ரீகாந்த் Open Talk!

ரோகித் சர்மா தலைமையிலான அணி உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Summary

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. மிகப்பெரிய தொடருக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தொடர் முழுவதும் இந்திய ஆடுகளங்களில் நடைபெறுவதால் இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் அவர்களின் மிடில் ஆர்டர் பேட்டர்களும், பவுலிங்க் காம்பினேஷும் கேள்விக்குறியாக இருந்த நிலையில், பும்ரா மற்றும் கேஎல் ராகுல் முதலிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு வலு சேர்த்துள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பை குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “உலகக்கோப்பையில் இந்திய அணியின் முதல் போட்டி சென்னையில் தான் நடைபெறுகிறது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது. உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் 2011 போன்று நடப்பாண்டு உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com