”தோனியுடன் யாரையும் ஒப்பிட முடியாது” - புகழாரம் சூட்டிய கே.எல்.ராகுல்!

”தோனியுடன் யாரையும் ஒப்பிட முடியாது” என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
dhoni, kl rahul
dhoni, kl rahultwitter

உலகக்கோப்பை தோல்விக்குப் பின் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம்படை, ஆஸ்திரேலியாவை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது. இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் 3 வகை (டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட்டிலும் கலந்துகொள்ளும் வகையில், 3 வகையான கிரிக்கெட் அணியும், கேப்டன்களும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி டி20க்கு சூர்யகுமார் யாதவ்வும், ஒருநாள் தொடருக்கு கே.எல்.ராகுலும், டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மாவும் அறிவிக்கப்பட்டனர்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்pt web

3 வகையான போட்டிகளுக்கும் 3 கேப்டன்கள் அறிவிக்கப்பட்டிருப்பது இன்னும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அடுத்து நடைபெற்ற 2 போட்டிகளிலும் தலா 1 போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற்று தொடரைச் சமன் செய்திருந்தன.

இதையும் படிக்க: Ind W- Eng W Test: மகத்தான 3 சாதனைகளைப் படைத்து மகுடம் சூடிய இந்திய மகளிர் அணி!

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நாளை (டிச.17) தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கே.எல்.ராகுல் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

KL Rahul
KL RahulTwitter

இதுகுறித்து அவர், “எங்களில் யாரையும் தோனியுடன் ஒப்பிட முடியாது. யாரும் அந்த உயர்ந்த மனிதனுடன் ஒப்பிட விரும்பமாட்டோம். அவர்தான் எப்போதும் எங்களுக்கு தலைவர். அவரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். டி.ஆர்.எஸ்., ஸ்டம்பிங்கில் அவர் செய்ததைப் பார்த்து, நான் தனிப்பட்ட முறையில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட மசூதி.. அடிக்கல் நாட்டு விழாவிற்கு மெக்கா இமாம் வருகை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com