ISPL T10: சச்சின் பந்தை அடித்த சூர்யா.. தொடரைத் தொடங்கிவைத்த நட்சத்திரங்கள்.. வைரல் வீடியோ!

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நட்பு சச்சின் பந்துவீச, நடிகர் சூர்யா அதை எதிர்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
சச்சின், சூர்யா
சச்சின், சூர்யாட்விட்டர்

உலகளவில் கிரிக்கெட் விளையாட்டிற்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். ரசிகர்களின் ஆர்வத்தைத் தணிக்கும்வகையில் கிரிக்கெட் போட்டிகளிலும் பலவித மாற்றங்களும் விதிகளும் புகுத்தப்பட்டு விருந்து படைத்துவருகின்றன. அந்த வகையில் மூன்று வகை (டி20, ஒருநாள், டெஸ்ட்) கிரிக்கெட் போட்டிகளுக்கு மத்தியில் தற்போது டி10 வகையிலான கிரிக்கெட் போட்டியும் தற்போது உலகம் முழுவதும் விளையாடப்பட்டு ரசிகர்களுக்கு புத்துணர்வை அளித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இவ்வகையான போட்டிகளே அதிகம் நடத்தப்படுகின்றன.

அந்தவகையில், இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தொடர் போட்டி, இன்று மும்பையில் தொடங்கியது. மார்ச் 13ஆம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். மார்ச் 14இல் அரையிறுதி, மார்ச் 15இல் பைனல் நடைபெற உள்ளது. 10 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில், கிரிக்கெட் பந்துக்கு பதிலாக டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படும். இதில் சென்னை சிங்கம்ஸ் (சூர்யா), மஜ்ஹி மும்பை (அமிதாப் பச்சன்), ஸ்ரீநகர் கே வீர் (அக்‌ஷய் குமார்), பெங்களூரு ஸ்டிக்கர்ஸ் (ஹிருத்திக் ரோஷன்), ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத் (ராம் சரண்), டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா (சாயிஃப் அலிகான்) உள்ளிட்ட 6 அணிகள் களமிறங்குகின்றன.

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஸ்ரீநகர் கே வீர் – மஜ்ஹி மும்பை அணிகள் மோதுகின்றன. முன்னதாக, அணியின் உரிமையாளர்கள் கலந்துகொண்டு நட்பு ரீதியிலாக கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். இதில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பந்தை வீச, சூர்யா அடித்து ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com