வங்கதேசத்தின் உலகக்கோப்பை போட்டிகளை சென்னையில் நடத்த ஐசிசி திட்டம்
வங்கதேசத்தின் உலகக்கோப்பை போட்டிகளை சென்னையில் நடத்த ஐசிசி திட்டம்web

சென்னையில் வங்கதேச உலகக்கோப்பை போட்டிகள்.. பரிசீலித்துவரும் ஐசிசி மற்றும் பிசிசிஐ!

இந்தியாவிற்கு வந்து டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க வங்கதேசம் மறுத்துவரும் நிலையில், இலங்கையில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் ஐசிசி தடுமாறிவருகிறது. இந்தசூழலில் சென்னையில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது..
Published on
Summary

வங்கதேசத்தில் நடந்த வன்முறையால் ஐபிஎல் தொடரில் இருந்து முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டதை தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் போட்டிகளை நடத்த பரிசீலிக்கின்றன.

வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை கலவரத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் இந்தியாவில் வந்து ஐபிஎல் போட்டியில் விளையாட கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வங்கதேச வீரரை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முஸ்தஃபிசூர் ரஹ்மான்
முஸ்தஃபிசூர் ரஹ்மான்web

பிசிசிஐயின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் வந்து விளையாட மாட்டோம் என ஐசிசிக்கு கடிதம் எழுதியது. மேலும் ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது.

இந்தசூழலில் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 3 வாரங்களே மீதமுள்ள நிலையில் என்ன செய்வதென்ற குழப்பத்தில் ஐசிசி மற்றும் பிசிசிஐ இருந்துவருகின்றன..

வங்கதேசத்தின் உலகக்கோப்பை போட்டிகளை சென்னையில் நடத்த ஐசிசி திட்டம்
'முஸ்தஃபிசூர் ஒருபோதும் அதை செய்யமாட்டார்..' அதுதான் அவர் மனசு! சகவீரர்கள் பதில்!

சென்னை, திருவனந்தபுரத்தில் நடத்த திட்டம்..

வங்கதேசத்தின் கோரிக்கையின் படி இலங்கையில் போட்டியில் நடத்துவதில் மைதானங்களின் பற்றாக்குறையால் சிக்கல் நீடிக்கும் நிலையில், ஐசிசி மற்றும் பிசிசிஐ இரண்டு தரப்பும் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் போட்டியை நடத்த பரிசீலித்துவருவதாக கிறிக்பஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி
வங்கதேச கிரிக்கெட் அணி

ஏற்கனவே சென்னை சிதம்பரம் மைதானத்தில் ஏற்கனவே உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையிலும், மைதானத்தில் நிறைய ஆடுகளங்கள் இருப்பதால் போட்டிகளை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என தமிழ்நாடு வாரியம் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளா வாரியத்திடம் இருந்தும் ஒத்துழைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அட்டவணையின் படி வங்கதேசத்தின் 4 போட்டிகளில் ஒன்று மும்பையிலும், மற்ற போட்டிகள் கொல்கத்தாவிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. இந்தசூழலில் ஐசிசி மற்றும் பிசிசிஐ முடிவுக்கு வங்கதேசம் ஒத்துழைக்குமா அல்லது பிரச்னை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வங்கதேசத்தின் உலகக்கோப்பை போட்டிகளை சென்னையில் நடத்த ஐசிசி திட்டம்
‘வங்கதேச வீரர் விளையாடினால் பிட்ச்சை பெயர்த்தெடுப்போம்..’ ஐபிஎல் தொடருக்கு மிரட்டல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com