\
big bash league in chennai india for the first time
சென்னை சேப்பாக்கம் மைதானம்Twitter

வரலாற்றில் முதல்முறை.. சென்னையில் நடைபெறும் பிக் பாஷ் போட்டி.. ரசிகர்கள் ஆர்வம்!

வரலாற்றிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், இந்தியாவில், குறிப்பாகச் சென்னையில் நடைபெறவுள்ளது.
Published on

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப்போன்று, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் வேறுவேறு பெயர்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் பிக் பாஷ் லீக் (BBL) சீசன் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வரலாற்றிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில், குறிப்பாகச் சென்னையில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 3 நாள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இறுதி நாளில், இரு நாட்டுப் பிரதமர்களும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையேயான விளையாட்டு மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, "கிரிக்கெட் என்பது இரு நாடுகளுக்கும் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது இரு நாட்டு மக்களின் உணர்வுபூர்வமான இணைப்பு" என்று குறிப்பிட்டார். டிசம்பர் மாதம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்த முதல் லீக் போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் ஆகிய இரு அணிகள் மோதவுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு வெளியே ஒரு பிக் பாஷ் லீக் போட்டி அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். அதேபோல், வெளிநாட்டு கிரிக்கெட் லீக் போட்டி ஒன்று இந்தியாவில் நடத்தப்படுவதும் இதுவே முதல்முறையாகும். பிசிசிஐ இந்த வரலாற்று நிகழ்வுக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இந்த போட்டியை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com