ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் புதிய தலைமுறை

”ஆர்ப்பரிக்க போகும் 1.30 லட்சம் ரசிகர்கள்.. எங்கள் இலக்கு இதுதான்” - பேட் கம்மின்ஸ் பரபரப்பு கருத்து

ஆர்ப்பரிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அமைதியாக்குவதுதான் இறுதிப்போட்டிக்கான தங்கள் இலக்கு என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பரிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அமைதியாக்குவதுதான் இறுதிப்போட்டிக்கான தங்கள் இலக்கு என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மைதானத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்திய அணிக்கு ஆதரவாக குரல் எழுப்புவர். அது வியக்கத்தக்க ஒன்றாக இருக்கும். இறுதிப்போட்டியின் போது ரசிகர்கள் அனைவரும் தங்கள் நாட்டு அணிக்கு ஆதரவாக ஆர்ப்பரித்து குரல் எழுப்புவது இயல்புதான்.

ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ்
INDvAUS | மூன்றாவது உலகக் கோப்பையை முத்தமிடுமா இந்தியா..?

ஆனால் அது போன்ற சத்தங்களை அமைதியாக்கும்போது கிடைக்கும் திருப்தி ஒரு விளையாட்டு வீரனுக்கு வேறு எதிலும் கிடைக்காது. அது போன்ற திருப்தியை நாளை அடைவதே தங்கள் இலக்கு . இந்திய அணி இத்தொடரில் சிறப்பாகவே ஆடி வந்துள்ளது. ஆனால் அவர்களை வீழ்த்த இயன்ற வரை தங்கள் அணி போராடும். தங்கள் அணி  திறமையை முழுமையாக
வெளிப்படுத்தவில்லை . இறுதிப்போட்டிக்காக அதை சேமித்து வைத்திருக்கிறோம்.” என்று கம்மின்ஸ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com