மீண்டும் போட்டிக்கு திரும்பினார் அஸ்வின் - பிசிசிஐ தெரிவித்த தகவல்

3வது டெஸ்டின் 4வது நாளில் இருந்து இந்திய அணியில் மீண்டும் ரவிசந்திரன் அஸ்வின் இணைய உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
aswin
aswintwitter

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடர் தற்போது சம நிலையில் உள்ளது.

aswin
aswintwitter

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர் அஸ்வின் தனது 500வது விக்கெட்டை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். இந்நிலையில், 2வது நாளுக்குப் பிறகு அஸ்வின் தனது குடும்ப அவசரநிலை காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தெரிவித்து இருந்தது. அஸ்வின் குடும்ப மருத்துவ அவசர நிலை காரணமாக சென்னைக்கு திரும்பினார்.

இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”குடும்ப அவசரநிலை காரணமாக சிறிது காலம் இல்லாத பிறகு அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்புவதை அறிவிப்பதில் அணி நிர்வாகம் மகிழ்ச்சி அடைகிறது. போட்டியின் 4வது நாளில் மீண்டும் அஸ்வின் களமிறங்குவார். நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் அணிக்காக தொடர்ந்து பங்களிப்பார் என்பதையும் உறுதிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை மீண்டும் களத்திற்கு வரவேற்பதில் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது” என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com