கிரிக்கெட்: உமிழ்நீரால் பந்தை பளபளப்பாக்க நிரந்தர தடை -ஐசிசி கொண்டுவரும் புதிய விதிமுறைகள்

கிரிக்கெட்: உமிழ்நீரால் பந்தை பளபளப்பாக்க நிரந்தர தடை -ஐசிசி கொண்டுவரும் புதிய விதிமுறைகள்
கிரிக்கெட்: உமிழ்நீரால் பந்தை பளபளப்பாக்க நிரந்தர தடை -ஐசிசி கொண்டுவரும் புதிய விதிமுறைகள்

கிரிக்கெட் போட்டிகளின்போது பந்தை உமிழ்நீரால் பளபளப்பாக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது உமிழ்நீரால் பந்தை பளபளப்பாக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன் விளையாட்டு நிலைமைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் அமைப்பு கொரோனா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய மாற்றத்தை நிரந்தரமானதாக அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவுரவ் கங்குலி தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி அளித்த இந்த பரிந்துரை உட்பட மேலும் பல பரிந்துரைகளை தலைமை நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது. இந்த புதிய பரிந்துரைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. அவ்வாறு அமலுக்கு வரும் புதிய விதிகள் இதோ!!

1. ஸ்ட்ரைக்கிங் முனையில் நிற்கும் பேட்டர் ஒருவர் அவுட் ஆனால், அவர் கிரீஸை கிராஸ் செய்திருந்தாலும் களமிறங்கும் புதிய பேட்டர் ஸ்டிரைக்கிங் முனையிலேயே களமிறங்க வேண்டும்.

2. கோவிட்-19 தொடர்பான தற்காலிக நடவடிக்கையாக சர்வதேச கிரிக்கெட்டில் பந்தை பளபளப்பாக்க உமிழ்நீரைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. இந்தத் தடை நிரந்தரமாக்கப்படுவது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.

3. பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் உள்வரும் புதிய பேட்டர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரண்டு நிமிடங்களுக்குள் ஸ்டிரைக் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும்; அதே நேரத்தில் டி20 போட்டிகளில் தொண்ணூறு வினாடிகள் என்ற தற்போதைய வரம்பு மாறாமல் உள்ளது.

4. பந்து வீச்சாளர் பந்துவீசுவதற்கு ஓடிக்கொண்டிருக்கும்போது ஃபீல்டிங் பக்கத்தின் நியாயமற்றமற்றும் வேண்டுமென்றே நகர்த்தினாலும், நடுவர் பேட்டிங் பக்கத்திற்கு ஐந்து பெனால்டி ரன்களை டெட் பந்தின் அழைப்புக்கு கூடுதலாக வழங்கலாம்.

5. நான்-ஸ்ட்ரைக்கரின் ரன் அவுட் 'அன்ஃபேர் ப்ளே' பிரிவில் இருந்து 'ரன் அவுட்' பிரிவுக்கு மாற்றப்படுகிறது.

6. ஜனவரி 2022 இல் டி20 போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்-மேட்ச் பெனால்டி( பீல்டிங் அணி திட்டமிடப்பட்ட இடைநிறுத்த நேரத்திற்குள் (Stragetic Time out) தங்கள் ஓவர்களை வீசத் தவறினால், மீதமுள்ள ஓவர்களுக்கு பீல்டிங் வட்டத்திற்குள் கூடுதல் பீல்டரைக் கொண்டு வர வேண்டும்.), 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் முடிந்த பிறகு ஒருநாள் போட்டிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com