பயிற்சியாளர் இன்றி டேபிள் டென்னிஸில் சாதிக்கும் தமிழக வீரர்

பயிற்சியாளர் இன்றி டேபிள் டென்னிஸில் சாதிக்கும் தமிழக வீரர்

பயிற்சியாளர் இன்றி டேபிள் டென்னிஸில் சாதிக்கும் தமிழக வீரர்
Published on

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் வெளிநாட்டில் நடைபெறும் லீக் போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்து வருகிறார். தம்மை போன்ற வீரர்கள் சாதிப்பதற்கு அரசின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார்.

ஷரத் கமல், ஆண்டனி அமல்ராஜ் என தமிழகத்தை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பலர் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகளில் சாதித்து வருகின்றனர். அவர்களை போன்று சாதிக்கும் முயற்சியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த ராகுல். நார்வேயில் நடைபெற்ற லீக் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய இவர், தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருக்கிறார்.

27 வயதாகும் ராகுல், நார்வே லீக் அடுத்த சீசன் போட்டிகளுக்காக மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தம்மை போன்று குன்னூரில் இளம் வீரர் - வீராங்கனைகள் சாதித்து வருவதாகவும் அவர்களுக்கு அரசு உரிய நேரத்தில் உதவிகள் செய்தால் அவர்களும் சாதிப்பார்கள் என்று ராகுல் தெரிவித்தார்.

தேசம் கடந்து ஜொலித்து கொண்டிருக்கும் ராகுல் போன்ற வீரர்கள் மீது மாநில அரசின் பார்வை பட வேண்டும் என்பதே, குன்னூர் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com