குறைந்த பட்சம் பிளே ஆஃப்: தினேஷ் கார்த்திக் ஆசை!

குறைந்த பட்சம் பிளே ஆஃப்: தினேஷ் கார்த்திக் ஆசை!

குறைந்த பட்சம் பிளே ஆஃப்: தினேஷ் கார்த்திக் ஆசை!
Published on

இந்த வருட ஐபிஎல் போட்டியில் குறைந்த பட்சம் பிளே ஆப் சுற்றுவரையாவது வரவேண்டும் என்பது என் நோக்கம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் கூறினார். 

பதினோறாவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி வரும் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை 8ஆம் தேதி சந்திக்கிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் பொறுப்பேற்றுள்ளார். துணை கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் கூறும்போது, ’கொல்கத்தா அணிக்கு கவுதம் கம்பீர் செய்த சாதனை பிரமிக்க வைப்பது. அவரைப் போல என்னிடமும் நிர்வாகம் அதிகம் எதிர்பார்க்கும். அதை அறிவேன். அதனால் எனக்கு அழுத்தம் இருக்கும். குறைந்தபட்சம் பிளே ஆஃப் வரையாவது முன்னேற வேண்டும் என்பது என் நோக்கம். பங்களாதேஷுக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டி பைனலில் சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்தது பற்றி இப்போதும் கேட்கிறார்கள். அது முடிந்து நாட்கள் கடந்துவிட்டன. அதன் பிறகு நிறைய மாறிவிட்டன. ரசிகர்களும் அதிலிருந்து சென்றுவிட்டனர். ஐபிஎல் தொடரில் நான் பல்வேறு வரிசையில் இறங்குவேன். ஐபிஎல் என்பது சூழ்நிலைகளைச் சமாளிப்பது. அதற்காக வித்தியாசமாக என்னை நடத்திக் கொள்ள மாட்டேன். என் மனைவி தீபிகா பல்லிக்கல் பற்றி கேட்கிறார்கள். அவரிடம் இருந்து நான் உறுதியையும் கடின உழைப்பையும் கற்றுக் கொண்டேன். காமன்வெல்த் போட்டிகளுக்காக தீபிகா உண்மையில் கடினமாக உழைத்தார்’ என்றார்.

காம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 2012, 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் 2011, 2016, 2017-ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்றுவரை வந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com