மிதாலிராஜ் நீக்கப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு

மிதாலிராஜ் நீக்கப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு
மிதாலிராஜ் நீக்கப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில் மிதாலிராஜ் நீக்கப்பட்டது குறித்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்தது. இதில், பி பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை இந்திய அணி வென்றது. இந்தப் போட்டி யில் மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியது. அதற்கு முன், 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருந் தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி, ஆன்டிகுவாவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி, 19.3 ஓவரில் 112 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில், அதிகப் பட்சமாக மந்தனா 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

 பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியை அடுத்து இந்திய மகளிர் அணி, உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது.

முக்கியமான இந்தப் போட்டியில், இந்த தொடரில் இரண்டு அரை சதம் விளாசிய மிதாலிராஜ் சேர்க்கப்படவில்லை. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. காயத்தில் இருந்து குணம் அடைந்த பின்னும் அவர் சேர்க்கப் படாதது ஏன் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் நாசர் ஹூசை னும் சஞ்சய் மஞ்சரேக்கரும் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்டனர். அவர் கூறும்போது, ’ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜ்-க்கு இடம் கிடைக்கவில்லை. எந்த முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப் பட்டது. இதில் வருத்தப்பட எதுவும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மிதாலி ராஜின் மானேஜர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விளாசினார். ‘கவுர், சூழ்ச்சியாக செயல் படுகிறார். அவர் பொய் சொல்கிறார். முதிர்ச்சியற்றவர், கேப்டனாக இருக்க தகுதியில்லாதவர்’ என்று ட்விட்டரில் கடுமையாகத் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பிய சிறிது நேரத்திலேயே அந்த ட்விட்டை நீக்கிவிட்டார் குப்தா. இதையடுத்து மகளிர் கிரிக்கெட் அணிக்குள்ளும் அரசியல் புகுந்துள்ளது தெரிய வந்திருக்கிறது.


இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளிக்க மிதாலிராஜ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார், மானேஜர் திருப்தி பட்டாச் சார்யா ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்ப இருக்கிறது. இவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறும்போது, ‘வீராங்கனைகளின் மானேஜர்கள் வெறுப்பூட்டும் கருத்துகளை தேவையில்லாமல் தெரிவிக்கக் கூடாது. அணியில் உள்ள அனைவரும் கண்ணியத்தை காக்க வேண்டும் ’ என்று தெரிவித் துள் ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com