ராஜஸ்தானை எளிதாக வென்றது கொல்கத்தா!

ராஜஸ்தானை எளிதாக வென்றது கொல்கத்தா!
ராஜஸ்தானை எளிதாக வென்றது கொல்கத்தா!

ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா -ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர். ரஹானே 5 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித், பட்லருடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 11 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. பட்லர் 34 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அதன்பின்னர் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய ஸ்மித், அரைசதம் கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. ஸ்மித், 59 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி சார்பில் ஹாரி கார்னி 2 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

பின்னர் 140 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, கிறின் லின் (32 பந்தில் 50 ரன்), சுனில் நரேன் (25 பந்தில் 47 ரன்), ராபின் உத்தப்பா (16 பந்தில் 26) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 13.5 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இது கொல்கத்தா அணிக்கு 4-வது வெற்றி. ராஜஸ்தானுக்கு 4-வது தோல்வி.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com