“கெயிலால் எனக்கு சில டாட் பால்ஸ்” - கே.எல்.ராகுல்

“கெயிலால் எனக்கு சில டாட் பால்ஸ்” - கே.எல்.ராகுல்

“கெயிலால் எனக்கு சில டாட் பால்ஸ்” - கே.எல்.ராகுல்
Published on

கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தால் தான் சில டாட் பந்துகளை வைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். 

2019 ஐபிஎல் தொடரின் 13வது போட்டி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி பஞ்சாப் மைதானத்தில் நடைபெறுவதால், அந்த அணி சற்று பலத்துடன் இருக்கும் எனப்படுகிறது. இருப்பினும் டெல்லி அணியும் வலுவான பேட்டிங்கை பெற்றிருப்பதால் போட்டி சற்று கணிக்க முடியாத வகையில் இருக்கலாம்.

பஞ்சாப் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் 4 (4) மற்றும் 1 (5) என சொற்ப ரன்களில் அவுட்டாகிய கே.எல்.ராகுல், 3வது போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 71 (57) குவித்தார். இதன்மூலம் அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள டெல்லிக்கு எதிரான போட்டி தொடர்பாக பேசிய ராகுல், “எனக்கு கிடைக்கு நேரத்திற்குள் என்னால் முடிந்த அளவு பேட்டிங் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். கிறிஸ் கெயில் அழகாக பந்துகளை அடிக்கிறார். அதனால் நான் சில டாட் பால்ஸ்களை வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com