மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கெயில்; இந்த சீசனில் முதல் சதம்

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கெயில்; இந்த சீசனில் முதல் சதம்
மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கெயில்; இந்த சீசனில் முதல் சதம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கெயில் சதம் அடித்துள்ளார்.

11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன. மொகாலியில்  இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் களமிறங்கினர். கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் இந்தப் போட்டியில் 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய அகர்வால் 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதலில் நிதானமாக விளையாடிய கெயில், பிறகு அதிரடியில் இறங்கினார். ரஷித் கான் வீசிய 14-வது ஓவரில் 4 சிக்சர்கள் பறக்கவிட்டு அசத்தினார் கெயில். அதிரடியாக விளையாடியவர், 11வது ஐபிஎல் சீசனின் முதலாவது சதத்தை பதிவு செய்தார். 63 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த கெயில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 11 சிக்சர்களும் 1 பவுண்டரியும் அடங்கும். கருண் நாயர் (31), பிஞ்ச் (14) ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில், புவனேஷ்வர் குமார், ரஷித் கான், கவுல் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com