ஆனால் போட்டிக்குப் பிறகு பேட்டியளித்த கிறிஸ் கெய்ல், தான் ஓய்வை அறிவிக்கவில்லை என்றும் மேலும் ஒரு டி-20 தொடரில் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், ''தனிப்பட்ட முறையில் எனக்கும், அணிக்கும் இது மிகவும் ஏமாற்றமளிக்கும் உலகக் கோப்பை தொடர். நான் இன்னும் ஒரு டி20 உலகக் கோப்பையை விளையாட விரும்புகிறேன். ஆனால் என்னை அனுமதிக்கமாட்டார்கள்'' என்றார்.