"மைதானத்தில் களமிறங்க காத்திருக்கிறேன்" - புது ஜெர்சியில் புஜாரா சூளுரை

"மைதானத்தில் களமிறங்க காத்திருக்கிறேன்" - புது ஜெர்சியில் புஜாரா சூளுரை

"மைதானத்தில் களமிறங்க காத்திருக்கிறேன்" - புது ஜெர்சியில் புஜாரா சூளுரை
Published on

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புது ஜெர்சியில் மைதானத்தில் களமிறங்க காத்திருப்பதாக புஜாரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் சுவுத்தாம்ப்டன் நகரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இதற்கா கொரோனா விதிமுறையின் கீழ் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தூணான புஜாராவும் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 2 ஆம் தேதி தனி விமானத்தில் இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில் புஜாரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஜெர்சியை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "இதுதான் புதிய கிட், மைதானத்தில் களமிறங்க காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com