செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!

செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!
செஸ்ஸபிள் செஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!

இந்தியாவின் இளம் கிராண்; மாஸ்டர் பிரக்ஞானந்தா செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார். ஆன்லைனில் நடந்து வரும் இத்தொடரில் அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வியடைய செய்தார்.

தரவரிசையில் தன்னை விட பல இடங்கள் முன்னிலையில் உள்ள அனிஷ் கிரியை பிரக்ஞானந்தா டை பிரேக்கர் சுற்றில் 1.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் இறுதிப்போட்டியில் நுழையும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தா பெறுகிறார்.

இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள சீன வீரர் டிங் லிரன்-ஐ பிரக்ஞானந்தா எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com