அணியில் மாற்றம் எப்படி ? - தோனி சொன்ன பதில்

அணியில் மாற்றம் எப்படி ? - தோனி சொன்ன பதில்
அணியில் மாற்றம் எப்படி ? - தோனி சொன்ன பதில்

ஐபிஎல் போட்டிகளில் நீண்ட இடைவெளி என்பது அணியில் மாற்றத்தைக் கொண்டு வர உதவியாக இருந்தது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசி வருகிறது. ஐதராபாத் அணியில் தொடக்க வீரர் டேனி பேரிஸ்டோவ் ரன் எதுவும் எடுக்கமால் அவுட் ஆகிச் சென்றார்.

முன்னதாக டாஸ் போட்டவுடன் பேசிய தோனி, “விக்கெட்டை விரைவில் எடுப்போம் என நம்புகிறேன். எங்களுக்கு நீண்ட நேரம் கிடைத்ததால் முக்கிய சந்திப்புகளை நடத்த முடிந்தது. அது அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் தேவையான மாற்றங்களை செய்ய உதவியாக இருந்தது. ஒரு அணிக்கு பேட்டிங் என்பது மிக முக்கியமானது. நீண்ட நேரம் விளையாடுவதும், அனுபவமும் போட்டியில் நன்றாக எடுபடும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com