டாஸ் வென்றது சென்னை அணி : ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங்

டாஸ் வென்றது சென்னை அணி : ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங்
டாஸ் வென்றது சென்னை அணி : ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. அபுதாபி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றில் பங்கேற்கும் தகுதியை தக்க வைக்கும் என்பதால் இன்று ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com