ஐபிஎல் 2022: முதல் போட்டியில் எந்த அணியுடன் மோதுகிறது சிஎஸ்கே?

ஐபிஎல் 2022: முதல் போட்டியில் எந்த அணியுடன் மோதுகிறது சிஎஸ்கே?
ஐபிஎல் 2022: முதல் போட்டியில் எந்த அணியுடன் மோதுகிறது சிஎஸ்கே?

மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் என தகவல் வெளியாகி உள்ளது.

உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 15வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 26ம்தேதி தொடங்கி மே 29ம்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தாண்டு முதல் 10 அணிகள் தொடரில் பங்கேற்பதால், ஐபிஎல் அணிகள் 2 குரூப்களாக பிரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏ குரூப்பில் முதல் இடத்தில் மும்பை அணி உள்ளது. இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணியும், அதற்கடுத்த இடங்களில் ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளும் இடம்பெற்றுள்ளன. பி குரூப்பில் முதல் இடத்தில் சென்னையும், இரண்டாவது இடத்தில் ஹைதரபாத்தும் உள்ளது. பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அனைத்து அணிகளும் மும்பை வான்கடே மைதானம் மற்றும் டி.ஓய். பாட்டில் மைதானத்தில் தலா 4 போட்டிகளும், பிராபோர்ன் மைதானம் மற்றும் புனே மைதானம் தலா 3 போட்டிகளும் விளையாடும். ஒரு அணி அதே குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். மேலும் எதிர் குழுவில் அதற்கு நேராக உள்ள அணிக்கு எதிராக 2 முறையும், மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். மார்ச் 26ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்கலாம்: “சாஹாவிடம் வெளிப்படையாக டிராவிட் பேசியதில் என்ன தவறு?” - முன்னாள் பயிற்சியாளர் ஆதரவு குரல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com