வெற்றிக்காக அடித்த கோலை உயிரிழந்த வீராங்கனை பிரியாவிற்கு சமர்பித்த சென்னை FC வீரர்!

வெற்றிக்காக அடித்த கோலை உயிரிழந்த வீராங்கனை பிரியாவிற்கு சமர்பித்த சென்னை FC வீரர்!
வெற்றிக்காக அடித்த கோலை உயிரிழந்த வீராங்கனை பிரியாவிற்கு சமர்பித்த சென்னை FC வீரர்!

ISL கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக தான் அடித்த கோலை, உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு அர்ப்பணிப்பதாக சென்னையின் FC அணி வீரர் வின்சி பரெடோ கூறியுள்ளார்.

ISL கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சென்னையின் FC அணி ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து விளையாடியது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் ரசிகர்களின் ஆதரவுடன் தொடக்கம் முதல் சென்னையின் FC அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 26வது நிமிடத்தில் சென்னையின் FC அணி வீரர் ஸ்லிஸ்கோவிச் சென்னை அணிக்கு முதல் கோல் அடித்தார். சென்னை அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினாலும் அடுத்த கோல் அடிக்காத சூழலில் 75வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் இஷான் பண்டிட்டா கோல் அடித்தார்.

பின்னர் போட்டியின் 75வது நிமிடத்தில் சென்னை அணி பயிற்சியாளர் தாமஸ், வின்சி பரெடோ, நாசர் எல் கயாட்டி ஆகியோரை substitue வீரர்களாக களம் இறக்க, களமிறங்கிய அடுத்த நிமிடத்தில் வின்சி பரெடோ கோல் அடித்து அசத்தினார். அதன் பின் 84வது நிமிடத்தில் நாசர் எல் கயாட்டி சென்னை அணிக்கு மூன்றாவது கோலை அடித்தார்.

போட்டியின் முடிவில் சென்னை அணி 3-1 என ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி சென்னை மைதானத்தில், இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

பின்னர் தன்னுடைய போட்டி குறித்து பேசிய வின்சி பரெடோ

சென்னை அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும்,சென்னை அணிக்காக இன்று தான் அடித்த கோலை உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரையாவிற்கு அர்ப்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com