எதிரணி வீரர் தாக்கியதில் கிக் பாக்ஸிங் வீரர் உயிரிழப்பு - சென்னையில் நடந்த 'ஷாக்' சம்பவம்

எதிரணி வீரர் தாக்கியதில் கிக் பாக்ஸிங் வீரர் உயிரிழப்பு - சென்னையில் நடந்த 'ஷாக்' சம்பவம்
எதிரணி வீரர் தாக்கியதில் கிக் பாக்ஸிங் வீரர் உயிரிழப்பு - சென்னையில் நடந்த 'ஷாக்' சம்பவம்

சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் விளையாட்டு போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் மஹாராஷ்டிரா மாநில அணியைச் சேர்ந்த கேசவ் முடேல் என்பவர் தாக்கியதில் அருணாச்சல பிரதேச வீரர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com