ரசிகர்கள் நம்பிக்கையை காப்பாற்றிய நெய்மர் : காலிறுதியில் பிரேசில்

ரசிகர்கள் நம்பிக்கையை காப்பாற்றிய நெய்மர் : காலிறுதியில் பிரேசில்
ரசிகர்கள் நம்பிக்கையை காப்பாற்றிய நெய்மர் : காலிறுதியில் பிரேசில்

மெக்ஸிகோவிற்கு எதிரான நாக் அவுட் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது.

21வது ஃபிபா உலகக்கோப்பை தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்தக் கால்பந்து தொடர் பல போட்டிகளுக்குப் பிறகு அடுத்தக்கட்டமான கால் இறுதிக்கு நகர்ந்துள்ளது. முதல் சுற்றில் 16 அணிகள் வெளியேற்றப்பட்டு, மற்ற 16 அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி வந்தன. இதில் வெற்றி பெற்ற அணிகள் கால் இறுதிக்கு முன்னேறின. இந்த நாக் அவுட் சுற்றில் இன்று மெக்ஸிகோ மற்றும் பிரேசில் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதி நேரம் முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் போட்டியின் 51வது நிமிடத்தில் பிரேசிலை சேர்ந்த நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடித்தார். அந்தத் தருணம் அரங்கமே அதிர்ந்தது. நெய்மரின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் பிர்மினோ கோல் அடித்தார். இதனால் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பிறகு ஆட்டம் முடியும் வரை மெக்ஸிகோ கோல் அடிக்காததால், பிரேசில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிரேசில் கால் இறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com