இலங்கை-நியூசி. டெஸ்ட்: 2 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு!

இலங்கை-நியூசி. டெஸ்ட்: 2 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு!

இலங்கை-நியூசி. டெஸ்ட்: 2 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு!
Published on

இலங்கை- நியூசிலாந்துக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, கொழும்பு நகரில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

பலத்த மழை காரணமாக ஆட்டம் உணவு இடைவேளை வரை தொடங்கப்படவில்லை.  பிறகு முதலில் பேட்டிங் செய்த போது, மறுபடியும் மழை குறுக்கிட்டது. 36.3 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. 

திரிமன்னே (2 ரன்), குசல் மென்டிஸ் (32 ரன்) கேட்ச் ஆனார்கள். கேப்டன் கருணாரத்னே (49 ரன்), முன்னாள் கேப்டன் மேத்யூஸ் (0) களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மேத்யூஸ் 2 ரன்னிலும் அடுத்து வந்த பெரேராவும் டிக்வெல்லாவும் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். கருணாரத்னே 65 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com