சென்னை ஓபன்... போபண்ணா-ஜீவன் இணை சாம்பியன்

சென்னை ஓபன்... போபண்ணா-ஜீவன் இணை சாம்பியன்
சென்னை ஓபன்... போபண்ணா-ஜீவன் இணை சாம்பியன்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப்போட்டியில் சக இணையான புரவ் ராஜா - திவிஜ் சரண் இணையை எதிர்த்து போபண்ணா இணை விளையாடியது. முதல் செட்டை போபண்ணா-ஜீவன் இணை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது செட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா இணை, அந்த செட்டை 6-3 என கைப்பற்றி பட்டத்தை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை ஓபனில் பட்டம் வெல்லும் இந்தியாவை சேர்ந்த இரண்டாவது இணை பெற்றது. ஏற்கனவே லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி இணை சென்னை ஓபனில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1997-ஆம் ஆண்டு தொடங்கி 1999 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளும், 2002, 2011-ஆம் ஆண்டுகளிலும் பயஸ்-பூபதி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2012-ஆம் ஆண்டு செர்பிய வீரர் டிப்செராவிச்-சுடன் இணைந்து பயஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com