ஒலிம்பிக் வாள் ‌சண்டை:   இந்திய வீராங்கனை பவானி தேவி அசத்தல் வெற்றி

ஒலிம்பிக் வாள் ‌சண்டை: இந்திய வீராங்கனை பவானி தேவி அசத்தல் வெற்றி

ஒலிம்பிக் வாள் ‌சண்டை: இந்திய வீராங்கனை பவானி தேவி அசத்தல் வெற்றி
Published on

டோக்கியோ ஒலிம்பிக் வாள் ‌சண்டையில் சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை பவானி தேவி அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற அவர், துனிஷிய வீராங்கனை பென் அசிசியை எதிர்கொண்டார். தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவானி தேவி, 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் பென் அசிசியை வீழ்த்தினார். சென்னையைச் சேர்ந்த பவானிதேவி ஒலிம்பிக் வாள்வித்தை போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய நிலையில், தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதையடுத்து ஆண்களுக்கான குழு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் கஜகஸ்தான் அணியை இந்தியாவின் அடானு தாஸ், தருண்தீப்ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் கொண்ட அணி 6 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இதையடுத்து காலிறுதிக்கு இந்திய அணி தகுதிபெற்றது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com